சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடம்பூரில் இருந்து குன்றி வனச்சாலை வழியாக தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கடம்பூர் வனச்சரத்திற்குட்பட்ட மாமரத்து பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, புதர் மறைவில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தை மறித்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த பழனிச்சாமியை தாக்கியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் வனத்துறையினர் பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.