Categories: தமிழகம்

சிறுமுகை வனப்பகுதியில் குட்டியை ஈன்ற காட்டுயானை இறப்பு : பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்..குட்டிய யானையும் பரிதாப பலி!!

கோவை : சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 20 வயதுள்ள காட்டு யானை பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் குட்டியுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோவை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காகவும்,தண்ணீருக்காகவும் ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால் பல இடங்களில் மனித-வன உயிரின மோதல்களும் ஆங்காங்கே நடந்தேறி வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம், பெத்திக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பவானியாற்றின் நீர்தேக்கப்பகுதிகளில் உள்ளதால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சம்பரவள்ளி சராகம் பெத்திக்குட்டை பீட் மோதூர் பகுதியில் உள்ள இரட்டைக்கண் மாரியம்மன் கோவில் பாலம் அருகே நேற்றிரவு ரோந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர்.

மேலும்,இச்சம்பவம் குறித்து வனச்சரகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக்,உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டியுடன் இறந்த யானை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்து இரு நாட்கள் இருக்கலாம் எனவும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

23 minutes ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

35 minutes ago

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

2 hours ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

2 hours ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

2 hours ago

This website uses cookies.