கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைநிலங்களில் புகுவதும், விவசாயிகளின் கொட்டகைகளை பிரித்து அதில் இருக்கும் புண்ணாக்கு மற்றும் அரிசியினை உண்பதும் வாடிக்கையாகி வருகிறது.
குறிப்பாக தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, தித்திபாளையம், கரடிமடை மற்றும் மத்திபாளையம் போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுக்கரை வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து மத்திபாளையம், சென்னனூர், தீத்திபாளையம் பகுதிகளுக்கு தாயுடன் வந்த குட்டி யானை கூட்டம் வாழை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது.
இதனை கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகளை தீத்திபாளையம் அடுத்த அய்யாசாமி மலை அடிவாரப்பகுதியில் உள்ள கரட்டு பகுதிக்கு மேலாக யானையை விரட்டி காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதாகவும், கூட்டம் கூட்டமாக வருவதோடு மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் செல்வதாலும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.