கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக வனப் பகுதியை விட்டு கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் கூட்டம் வரத் தொடங்கியது.
பின்னர், பருவ மழைக் காலம் துவங்கி மலைகளில் வறட்சி நிலை மாறியது. இருந்த போதும், விவசாயிகளின் உணவுகளை ருசி கண்ட யானைகள் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் அப்பகுதியிலே முகாமிட்டு ருசியான உணவுகளை உண்டு வாழக் கற்றுக் கொண்டதால் தற்பொழுது வரை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், வனத் துறையினர் அதிகாரிகள் என அனைவரிடத்திலும், உரிய நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வனத் துறையினரும் யானைகளை கண்காணித்து விரட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு தொண்டாமுத்தூர், நரசிபுரம் அருகே உள்ள குப்பேபாளையத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தோட்டத்துக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க அதனை கண்காணித்து விரட்டினர்.
இதனால், அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் யானைகளால் உயிருக்கும், உடமைகளுக்கும் மற்றும் பயிர்களுக்கும் சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வாழ்க்கையை பயணித்துக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.