ரயில் மீது மோதாமல் இருக்க சுரங்கப்பாதையை பயன்படுத்திய காட்டு யானைகள் : வைரலாகும் வீடியோ!!!
கோவை அடுத்து எட்டிமடை வாளையாறு ரயில்வே வழித் தடத்தில் அடிக்கடி ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மதுக்கரையில் இருந்து வாளையார் வரை உள்ள ரயில்வே வழித்தடம் வனப் பகுதியில் அமைந்து உள்ளதால் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் யானைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் ரூபாய் 7.49 கோடி மதிப்பீட்டில் 60 அடி அகலமும் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
யானையின் நடமாட்டத்தை அறிவதற்காக சுரங்கப் பாதையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் யானைகள் இப்பகுதியை பயன்படுத்தாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் முதல் முறையாக காட்டு யானைகள் ஒன்று சுரங்கப் பாதை வழியாக வாளையார் அணைக்கு சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. யானைகள் சுரங்கப் பாதையை பயன்படுத்துவதன் மூலம் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்து உள்ளனர்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.