ரயில் மீது மோதாமல் இருக்க சுரங்கப்பாதையை பயன்படுத்திய காட்டு யானைகள் : வைரலாகும் வீடியோ!!!
கோவை அடுத்து எட்டிமடை வாளையாறு ரயில்வே வழித் தடத்தில் அடிக்கடி ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மதுக்கரையில் இருந்து வாளையார் வரை உள்ள ரயில்வே வழித்தடம் வனப் பகுதியில் அமைந்து உள்ளதால் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் யானைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் ரூபாய் 7.49 கோடி மதிப்பீட்டில் 60 அடி அகலமும் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
யானையின் நடமாட்டத்தை அறிவதற்காக சுரங்கப் பாதையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் யானைகள் இப்பகுதியை பயன்படுத்தாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் முதல் முறையாக காட்டு யானைகள் ஒன்று சுரங்கப் பாதை வழியாக வாளையார் அணைக்கு சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. யானைகள் சுரங்கப் பாதையை பயன்படுத்துவதன் மூலம் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்து உள்ளனர்.
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.