நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் உலா வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரிமறா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வள்ளுவர் நகர், வாசகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பது சகஜம் தான் என்றாலும், சமீப காலமாக இரவு நேரங்களில் அதிகளவில் வனவிலங்குகள் உலா வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் கூலாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், இரண்டு சிறுத்தைகள் மற்றும் 3 கரடிகள் உலா வருகிறது. இரவு நேரத்தில் உலா வரும் வனவிலங்குகளை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.