Categories: தமிழகம்

கிறிஸ்தவர்களோடு இணைந்து பாஜகவிற்கு பிரச்சாரம் செய்வேன் : வேலூர் இப்ராஹிம் அறிவிப்பு!!

கிறிஸ்தவர்களோடு இணைந்து பாஜகவிற்கு பிரச்சாரம் செய்வேன் : வேலூர் இப்ராஹிம் அறிவிப்பு!!

மத்தியசிறையில் அடைக்கப்பட்ட கிறிஸ்துவ குருமார்களை சந்திப்பதற்காக வந்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்களோடு இணைந்து பாஜகவிற்கு, வாக்களிக்ககோரி 7 பாராளுமன்றங்களில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம்.

பாஜக என்றாலே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிரான கட்சி என்ற போலிபிம்பம் இந்த தேர்தலில் கிழிக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை சமூகத்தின் காவலனாக வேடம் போடும் ஸ்டாலின் 21 திமுக பாராளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தார். அதில் சிறுபான்மையினர் ஒருவரும் கிடையாது.

பாஜகவிலிருந்து விலகி வந்ததிற்கான காரணம் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவளிக்கத்தான் என எடப்பாடி சொன்னார். ஆனால், 33 தொகுதியில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு தரவில்லை. ஆனால் பாஜகவில் பால் கனகராஜ் என்ற ஒரு கிறிஸ்துவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒரு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறோம். சிறுபான்மை சமூகத்தை அச்சமூட்டி, திமுக அதிமுக வளரவிடாமல் வைத்துள்ளனர்.

இஸ்லாமியருக்காக பாஜகவை எதிர்க்கிறோம் என சொல்லும் திமுக அதிமுக, சிறுபான்மையினர் முன்னேற்றம் குறித்து ஒன்றும் செய்யவில்லை. ஒரு ஸ்டார் பேச்சாளரும் சிறுபான்மையினர் இல்லை.

ஆனால் பாஜக தன்னை ஸ்டார் பேச்சாளராக முன்னிலைப்படுத்தியுள்ளது. பாஜகவை ஆதரிக்கிற இஸ்லாமிய , கிறிஸ்துவ மத குருமார்களை காவல் துறை மற்றும் அரசியல் வாதிகள் மிரட்டுவது என்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆல் சோல் சர்ஜ்ஜின் குருமார்கள் சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடினார். அப்போது தன்னையும், இந்து குருமாரையும் அழைத்து விழா நடத்தினர். என்னை அழைத்து விழா நடத்தியதற்காக அவர்களை பொய் வழக்கில் கைது செய்திருக்கின்றனர்.

ஊழலற்ற பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நினைத்தால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் திமுகவு அதிமுகவுக்கு கிடைக்காது . அதனால்தான், குருமார்களை பொய் வழக்கு போட்டு திமுக கைது செய்து சிறையில்டைத்திருக்கிறார்கள். அவரைப்பாரப்பதற்காக தான் வந்திருப்பதாக தெரிவித்தார்.

பாஜகவிற்கு ஆதரவளிக்கும் சிறுபான்மை மக்கள் மீது பொய் வழக்கு போட்டால், அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றார்.

தனது பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காவிட்டாலும், தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன். பொய் வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். எஸ் டி பி ஐ போன்ற பயங்கரவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கிறது.

எங்கள் கட்சியினரை நெளசாத் என்பவர் தாக்கி இருக்கிறார்.பாயங்கர வாதத்தை ஒழிக்க தேசப்பற்றோடு உழைக்கிற இஸ்லாமியருக்கு முறையான பாதுகாப்பை காவல் துறையினர் வழங்க வேண்டும்.

நாகூர் இஸ்லாமியரை சந்திக்க சென்ற தன்னை தீவிரவாதிகள் தாக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் எனக்கூறி, காவல் துறை எனது பிரச்சாரத்தை தடுக்கின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்தியல் உரிமையை காவல் துறை தடுக்கிறது.

பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து இஸ்லாமியர் வாழ்வியல் ரீதியாக முன்னேறினால்தான் தீவிரவாத செயலுக்கு செல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

காவல் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் எங்களது ஜனநாயக உரிமைக்கு தடையாக இருக்கின்றனர் எனத்தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

6 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

39 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

18 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

This website uses cookies.