Categories: தமிழகம்

தீபாவளிக்கு மறுநாள் லீவு..!பொதுமக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசின் சரவெடி அறிவிப்பு..?

தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வர். பலர் உறவினர்களுடன் பண்டிகையை விமர்சையாக கொண்டாட திட்டமிடுவர். இதற்காக முன்கூட்டியே பயணங்களை முடிவு செய்வார்கள்.

தீபாவளி பண்டிகையானது இந்தஆண்டு திங்கட்கிழமை வருவதால், அதற்கு முன்னதாக வரும் சனி, ஞாயிறு ஆகியவை வழக்கமான விடுமுறையாக இருப்பதால், மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

வெள்ளிக்கிழமை இரவே அனைவரும் புறப்பட்டு விடுவர். இதனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளிவந்து விட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளி முடிந்த அன்றைய தினமே அவரவர் வசித்து வரும் ஊர்களுக்கு திரும்புவது சாத்தியமானது அல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் நெரிசலில் தள்ளாடி விடும். ஒருநாள் தள்ளி செவ்வாய் கிழமை அன்று புறப்படலாம் என திட்டமிடுவர். இவ்வாறு திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மக்கள் பிரிந்து புறப்பட்டு செல்வதால் நெரிசல் குறையும்.

தமிழகத்தின் சாலைகள் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடைக்கும். இருப்பினும் விடுப்பு எடுக்க வேண்டி வரும். அதுவே செவ்வாய் அன்று தமிழக அரசே விடுமுறை என்று அறிவித்துவிட்டால் யாரும் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை. எப்படியும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏதாவதொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துவிடுவர்.

எனவே அக்டோபர் 25 செவ்வாய் கிழமை அன்று அரசு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையும், எதிர்பார்ப்பும் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதை வைத்தே பெற்றோர்களும் எப்போது திரும்பலாம் எனக் கணக்கு போடுவர்.

இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், தீபாவளிக்கு அடுத்த நாள் 25ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. எனவே அதற்கேற்ப திட்டமிட பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் தயாராகத் தொடங்கிவிட்டனர்.

Poorni

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

8 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

9 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.