Categories: தமிழகம்

2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல்… நாங்க அப்பவே சொன்னோமே : விஜயபாஸ்கர் வைத்த ட்விஸ்ட்!!

விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசியல் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் விண்ணை முற்றும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனை திமுக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அவர்கள் கவனம் முழுவதும் டாஸ்மாக் கடையில் தான் உள்ளது. டாஸ்மார்க் சரக்கை பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூட வைத்து விற்பவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. அப்போது அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது அரசு விதித்துள்ளது உரிமை தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்காது.

அதேபோன்று பேருந்தில் இலவச பயணம் செல்பவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கேவலமாக பார்க்கின்றனர் இலவச பயணம் நாங்கள் கேட்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ரோட்டிற்கு வந்தால் தான் உரிமை தொகை கிடைக்கும் போல் உள்ளது என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பாஸ்கர் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சீர் கெட்டுப் போய் உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை ஏன் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று கடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கேள்வி எழுப்பிய பிறகுதான் நேற்று மருத்துவ படிப்பு முடித்து முதல் பேட்ச் வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும் மருத்துவத்துறை இணை இயக்குனரை பணியிட நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் இதுதான் நிலை. அனைத்து மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தால் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் இவர்களுடைய ஆட்சியையும் சஸ்பெண்ட் செய்யும் நிலைதான் வரும்

மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். தலைமை திறனற்ற முறையில் செயல்பட்டால் கீழே பணியாற்றுபவர்களும் அதே போல் தான் இருப்பார்கள்.

தற்போது சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் ஆண்டிற்கு நான்காயிரம் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் ஆனால் திமுக ஆட்சியில் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் பணியமற்றப்படவில்லை.

மருத்துவர்கள் இணை இயக்குனரையும் குறை சொல்வது அமைச்சரின் திறன் இல்லாததை காட்டுகிறது. அமைச்சரை முன்னிலைப் படுத்துவதற்காக இணை இயக்குனரை சஸ்பெண்ட் செய்துள்ளார் இது கண்டிக்கத்தக்கது.

இணை இயக்குனரை அவ்வளவு எளிதாக சஸ்பெண்ட் செய்ய முடியாது முதலில் அவருக்கு விளக்கம் கேட்க வேண்டும் விளக்கம் சரியில்லை என்றால் விசாரணை செய்து அதன் பிறகு சஸ்பெண்ட் செய்யலாம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

11 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

12 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

12 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

13 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

13 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.