Categories: தமிழகம்

2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல்… நாங்க அப்பவே சொன்னோமே : விஜயபாஸ்கர் வைத்த ட்விஸ்ட்!!

விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசியல் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் விண்ணை முற்றும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனை திமுக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அவர்கள் கவனம் முழுவதும் டாஸ்மாக் கடையில் தான் உள்ளது. டாஸ்மார்க் சரக்கை பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூட வைத்து விற்பவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

மீண்டும் அதிமுக ஆட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. அப்போது அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது அரசு விதித்துள்ளது உரிமை தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்காது.

அதேபோன்று பேருந்தில் இலவச பயணம் செல்பவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கேவலமாக பார்க்கின்றனர் இலவச பயணம் நாங்கள் கேட்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ரோட்டிற்கு வந்தால் தான் உரிமை தொகை கிடைக்கும் போல் உள்ளது என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பாஸ்கர் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சீர் கெட்டுப் போய் உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை ஏன் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று கடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கேள்வி எழுப்பிய பிறகுதான் நேற்று மருத்துவ படிப்பு முடித்து முதல் பேட்ச் வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும் மருத்துவத்துறை இணை இயக்குனரை பணியிட நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் இதுதான் நிலை. அனைத்து மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தால் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் இவர்களுடைய ஆட்சியையும் சஸ்பெண்ட் செய்யும் நிலைதான் வரும்

மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். தலைமை திறனற்ற முறையில் செயல்பட்டால் கீழே பணியாற்றுபவர்களும் அதே போல் தான் இருப்பார்கள்.

தற்போது சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் ஆண்டிற்கு நான்காயிரம் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் ஆனால் திமுக ஆட்சியில் மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோர் பணியமற்றப்படவில்லை.

மருத்துவர்கள் இணை இயக்குனரையும் குறை சொல்வது அமைச்சரின் திறன் இல்லாததை காட்டுகிறது. அமைச்சரை முன்னிலைப் படுத்துவதற்காக இணை இயக்குனரை சஸ்பெண்ட் செய்துள்ளார் இது கண்டிக்கத்தக்கது.

இணை இயக்குனரை அவ்வளவு எளிதாக சஸ்பெண்ட் செய்ய முடியாது முதலில் அவருக்கு விளக்கம் கேட்க வேண்டும் விளக்கம் சரியில்லை என்றால் விசாரணை செய்து அதன் பிறகு சஸ்பெண்ட் செய்யலாம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.