தமிழகம்

கட்டைப்பைக்கு ரூ.500..? பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துனர்கள்.. என்ன நடந்தது?

கோவையில் இருந்து திருச்சி சென்ற பெண் பயணியிடம் ரூ.500 லஞ்சம் கேட்டதற்கு மறுத்ததால் அவரை நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்ற நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி: திருச்சியில் உள்ள கல்லணை பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் கணவரை இழந்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கல்லணை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகள்களுக்கு துணி, பலகாரம் வாங்கிவிட்டு, சொந்த ஊர் வருவதற்கு கோவையில் இருந்து திருச்சி பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது, அந்தப் பேருந்தின் நடத்துனர், பெண் வைத்திருந்த கட்டைப்பைக்கு ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தன்னுடைய பயணச்சீட்டு 160 ரூபாய் தான், அதே கட்டணத்தை தருகிறேன், இன்னொரு பயணச்சீட்டு வேண்டுமானாலும் கொடுங்கள் என ஷர்மிளா கூறியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நடத்துனர், அப்பெண்ணை நடுவழியிலே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு திருச்சி பேருந்தில் ஷர்மிளா ஏறியுள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை முதலில் இறக்கி விட்ட பேருந்து உணவு நிறுத்துமிடத்தில் இருந்துள்ளது. அங்கு இரண்டு பேருந்து நடத்துனர்களும் சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஃபேர்வெல் கொண்டாடிய மாணவிகளின் மேலாடையைக் கழற்றச் சொன்ன பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!

பின்னர், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அப்பெண்ணிடம் மற்றொரு பேருந்தின் நடத்துனரும் ரூ.500 லஞ்சம் கேட்டு, அதற்கு ஷர்மிளா தர மறுக்க, ஆட்கள் இல்லாத இடத்தில், நடுவழியில் இறக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணீருடன் காத்திருந்த பெண்ணுக்கு, காரில் சென்றவர்கள் உதவியுள்ளனர்.

மேலும், அவரை கரூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எதிராக புகாரும் பதிவு செய்துள்ளனர். எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் உள்பட இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

13 minutes ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

31 minutes ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

1 hour ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

2 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

3 hours ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

3 hours ago

This website uses cookies.