தமிழகம்

ஆசையாக அழைத்த பெண்.. உள்ளே போனதும் லாக்.. திருப்பூரில் திகைத்த இளைஞர்!

திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் குமார் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து வழக்கம்போல் பேசியுள்ளார்.

அப்போது, தான் தனது நண்பருடன் இருக்கிறேன் என்றும், நீங்களும் வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனவும் கொஞ்சலாய் அழைத்துள்ளார் அந்தப் பெண். இந்தக் குரலில் தத்தளித்த குமார், எங்கே வர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு, நான் சின்னியகவுண்டம்பாளையத்தில் இருக்கேன் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

ஆனால், அந்த அழைப்பை மீண்டும் இணைக்க, குமார் அப்பெண் கூறிய வீட்டிற்குச் சென்றுள்ளார். இவ்வாறு வீட்டிற்குள் சென்றதும் அந்தப் பெண் கதவை அடைத்துள்ளார். பின்னர் அடுத்த நொடியில், முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள், கத்தியுடன் குமாரை நெருங்கியுள்ளனர்.

தொடர்ந்து, அவர் அணிந்திருந்த நகைகள், கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டுச் செல், இல்லையென்றால் செத்துவிடு என கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட உயிர் பயத்தில், தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயின், அரை பவுன் மோதிரம் மற்றும் 3,500 ரூபாய் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வில்லனாக நடிப்பாரா விஜய்சேதுபதி…கொக்கி போடும் வில்லங்கமான இயக்குனர்.!

பின்னர், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து, இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீசார், ராயர்பாளையத்தைச் சேர்ந்த தினகரன் (45), அம்மா பாளையத்தைச் சேர்ந்த ராஜதுரை (24), ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த பரத் (22), மேற்கு பல்லடத்தை சேர்ந்த துரைராஜ் (29) மற்றும் அதே பகுதியைச் குமார் (29), இவர்களுக்கு உறுதுணையாக இருந்த திருச்சியைச் சேர்ந்த தேவி (40) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…

39 minutes ago

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

2 hours ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

2 hours ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

3 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

4 hours ago

This website uses cookies.