திருவள்ளூர் : காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (43). நேற்று இரவு செங்குன்றம் அருகில் உள்ள பாடியநல்லூர் வீரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய போது, பொன்னேரி அடுத்த சயனாவரம் சுதா என்பவரது காய்கறி கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் வேகமாக வந்து கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாக பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில், போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.