Categories: தமிழகம்

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த நேமளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெட்ரோல் நிலையம் பின்புறம் 35 வயது இளம் பெண் முகத்தில் ஆங்காங்கே காயங்களுடன் சடலமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து நேமலூர், செதில்பாக்கம், சத்தியவேடு சாலை, மாதர்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அரசு மதுபான கடை உள்ளது. அந்த அரசு மதுபான கடையிலிருந்து மூன்று பேர் பெட்ரோல் பங்க் பின்புறமாக ஒரு பெண்ணுடன் செல்லும் காட்சிகள் தெரிந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சம்பவங்களின் ஈடுபட்ட குற்றவாளிகளின் முகத்தை வைத்து பார்த்தபோது அதில் சிலர் இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து அந்த மூன்று நபர்களை அடையாளம் கண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் படிக்க: என் கையை உடைத்தது கோவை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தான் : சவுக்கு சங்கர் புகார்!

இந்த நிலையில் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பெண் பெட்ரோல் பங்க் இருட்டு பகுதியில் சென்றதாகவும் அதை பின்தொடர்ந்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர்( 21), கண்ணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெபக்குமார்(24) ஆகியோர் 3 பேரும் அந்த பெண்ணை கஞ்சா போதையில் சீரழித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது .

இதில் சூர்யா, சுரேந்தர் இருவர் மீது ஏற்கனவே கள்ளக்காதல் விவகார கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து பாதிரிவேடு போலீசார் மேற்கண்ட மூன்று வாலிபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பாதிரிவேடு காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லை கிராம பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

4 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

4 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

4 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

4 hours ago

This website uses cookies.