சொத்துக்காக நண்பனுடன் சேர்ந்து நிலம், வீடு, குழந்தைகளை அபகரித்ததோடு நண்பனின் ஆசைக்கு துணை போக சொன்ன கணவர் மீது பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் சரளா. இவருக்கும் திருச்சி துறையூரை அடுத்த பாலகிருஷ்ணன் பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கார்த்திக் சென்னையில் ஹரிப்பிரியா டிராவல்ஸ் என்கிற பெயரில் வாடகை ட்ராவல் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக, தனது நண்பரான துறையூரை அடுத்த பி.மேட்டூர் ரவி என்பவருடன் இணைந்து சரளாவிடம் ஆசை வார்த்தைகளை கூறி, சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள வீடு மற்றும் திண்டிவனத்தில் உள்ள 5 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கான பத்திரத்தை அபகரித்துள்ளார்.
மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று துறையூரில் உள்ள அம்மா வீட்டில் வைத்துள்ளதாகவும், சொத்து பத்திரம், குழந்தைகளை கேட்டால் நண்பனுடன் பழகுமாறு வற்புறுத்தியதாக பல திடுக்கிடும் தகவல்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் சரண் அடைந்தார் சரளா.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆசை வார்த்தை கூறி நல்லவர் போல் நடித்து தன்னுடைய சொத்துக்களையும், குழந்தைகளையும் அபகரித்த கணவர் மற்றும் அவரது நண்பர் ரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.