கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு நான்கு வயதில் ஜெகதீசன் என்ற மகன் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் மகேந்திரன் சமூக வலைதளம் மூலம் பழகி கடந்த மார்ச் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், தனது கணவர் மகேந்திரன் மற்றும் மாமனார் மாமியார் மீது வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்து, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முத்துமாரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: பிரதமருக்கு 74 வயசு ஆயிடுச்சு… மக்கள் முடிவு பண்ணீட்டாங்க ; காங்கிரஸ் எம்பி சொல்லும் காரணம்..!!!!!
தனது கணவரை வீட்டிலேயே குடியிருந்து வந்த நிலையில், தற்போது தன்னையும் தனது குழந்தையையும் மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டவர்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டதாகக் கூறி நான்கு வயது குழந்தையுடன் இளம்பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்டார்.
காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தரையில் அமர்ந்த இளம் பெண் தரையை விட்டு எழுந்திரிக்கவில்லை. தனக்கு நியாயம் வேண்டும் என்றும், தனது கணவனுடன் சேர்த்து வையுங்கள் என்று கண்ணீருடன் காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து தர்ணாவை கைவிட்டார்.
இளம் பெண் குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.