தருமபுரி : ஒகேனக்கல் அருவியின் அருகே செல்பி எடுக்கும் பொழுது பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்ல் நீர்வீழ்ச்சி.
இங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இயற்கை அழகை கண்டு களிக்க தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலுருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதும், மற்றும் அங்குள்ள அருவிகளின் முன் செல்பி எடுப்பதும் வழக்கம்.
அதனடிப்படையில் தருமபுரி அடுத்த பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி (வயது 35) அவரது தாய் மற்றும் சகோதரிகளுடன் ஒகேனக்கலை சுற்றி பார்த்த விட்டு அங்குள்ள மெயின் அருவி முன் அருகே இருந்த பாறை மீது ஏறி செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருவியின் அருகில் இருந்த பாறையின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த பெண் செல்பி எடுத்து இறந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.