தமிழகம்

கள்ளக்காதலிக்கு உண்டான கள்ளக்காதல்.. கள்ளக்காதலன் செய்த காரியம்.. நாமக்கல்லில் பரபரப்பு!

நாமக்கல்லில் கள்ளக்காதலிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வெப்படை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, பெண்ணின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்த சித்ரா (27) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருடன் தங்கியிருந்த நபர் குளித்தலையைச் சேர்ந்த அருள்பாண்டியன் (35) என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அருண்பாண்டியனைப் பிடிக்கும் பணியில் இறங்கினர். இதன்படி, வெப்படை அருகே உப்புபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அருள்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அருள்பாண்டியன் அளித்த வாக்குமூலத்தில், “கரூர் மாவட்டம் குளித்தலை தான் எனக்குச் சொந்த ஊர். கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிட்டார்.

அதே பகுதியைச் சேர்ந்த சித்ராவும் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். நாங்கள் இருவரும் குளித்தலை பகுதியில் வேலைக்குச் செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியது. இதனையடுத்து, நாமக்கல் பகுதியில் உள்ள நூற்பாலைக்கு இருவரும் வந்தோம்.

பின்னர், வெப்படை சந்தைப்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் – மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில், நூற்பாலையில் வேலை பார்க்கும் ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவள் அவருடன் நெருங்கிப் பழகினார். இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது.

இதையும் படிங்க: நண்பர்கள் கண்முன்னே பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்!

எனவே, அந்த நபருடன் பழகுவதை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தேன். ஆனால், நான் சொல்வதை சித்ரா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாள். இதனை நான் கண்டித்ததால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எங்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அருள்பாண்டியனை குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

20 minutes ago

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

38 minutes ago

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

15 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

16 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

17 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

17 hours ago

This website uses cookies.