கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய் இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய் இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு மகன்களை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலை கொண்ட சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு, 40 வயதான ஷீபா என்ற மனைவியும், 14 வயதில் கெவின், 7 வயதில் டிசைனா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதில், ஒரு ஆண் குழந்தைக்கு சிறிய அளவில் உடல் குறைபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால், கணவன், மனைவி இருவருமே மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு ஏசுதாசுக்கும், ஷீபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் இருந்து வெளியேறிய ஏசுதாஸ் வேர்க்கிளம்பியில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் படுத்துள்ளார். இரவு வீட்டில் மனவருத்தத்தில் இருந்த ஷீபா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை, எடுத்து தன் மீதும் இரண்டு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், தீக்காயம் அடைந்து அவர்கள் வீட்டில் உள்ளேயே கிடந்துள்ளனர்.
காலையில் குழந்தைகள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்க்கும் பொழுது, தீக்காயத்துடன் கிடந்த அவர்களை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீக்காயம் அடைந்த ஷீபாவும் அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்ற திருவட்டார் போலீசார் தாய் மற்றும் இரண்டு மகன்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.