2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2025, 1:18 pm
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ள
கஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர் ரெட்டி மற்றும் தேஜா (35) தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தேஜா தனது இரண்டு பிள்ளைகளையும் நேற்று மாலை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படியுங்க: மைனர் சிறுமியுடன் கல்லூரி மாணவன் திருமணம்.. சினிமா பாணியில் சிறுமியை கடத்திய கும்பல்!
மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததும், ஜீடிமெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் தேஜாவும் அவரது மூத்த மகன் ஹர்ஷித் ரெட்டியும் (11) சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். இளைய மகன் ஆஷிஷ் ரெட்டி (9) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் ஆனால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.
போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, தேஜா எழுதிய ஆறு பக்க தற்கொலைக் கடிதத்தை கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், தனது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டி மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குக் காரணம் அவளுடைய கண் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நிலையும் மேலும் தேஜாவின் குடும்பத்தில் இருந்த உளவியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டதால் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது.
தேஜா எப்படி தன்னையும் தன் குழந்தைகளையும் கொல்லும் நிலைக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.