புதுச்சேரியில் பெண் ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிளான வைரம், பிளாட்டினம் பையை ஒருமணி நேரத்தில் போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதுமாயி பசாக் (30), திருமணமாகாத இவர் தனது பெற்றோருடன் புதுச்சேரி வந்தார். ஆசிரம பக்தர்களான இவர்கள், புதுச்சேரி குருசுக்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த வாரம் பெங்களுருவிற்கு சென்றுவிட்டு நேற்று புதுவை திரும்பியுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற பிறகு, தான் கொண்டு வந்திருந்த பைகளில் 1 பை காணாமல் போய் இருப்பதும், அந்த பையில் தான் வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகளை வைத்து இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, இது குறித்து அவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீஸார் உடனே விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பயணித்த ஆட்டோ கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த பை பத்திரமாக மீட்கப்பட்டு மதுமாயியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.