பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வி.கே மில் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவன் தாக்கியதாக கூறி மனைவி பிரியதர்சினி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி பிரியதர்ஷினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓட முயன்ற கணவர் மணியை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கணவன் மனைவி பிரச்சினையில் மனைவியை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பழனி நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.