பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வி.கே மில் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவன் தாக்கியதாக கூறி மனைவி பிரியதர்சினி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி பிரியதர்ஷினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓட முயன்ற கணவர் மணியை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கணவன் மனைவி பிரச்சினையில் மனைவியை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பழனி நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.