கோவை ; கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.
மகள் கார்த்திகாவை பள்ளியில் இருந்து, ஜெகதீஸ்வரி தினமும் மாலை 4.30 மணியளவில் அழைத்துச் செல்வார். நேற்று மாலை 4.30 மணி ஆகியும் அவர் அழைத்துச்செல்ல வரவில்லை. கார்த்திகா 5.30 மணி வரை காத்திருந்தும் தனது அம்மா வராததால், வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.
வீட்டின் படுக்கை அறையில் தனது தாயார் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கழுத்து நெறிக்கப்பட்டு ஜெகதீஸ்வரி இறந்திருக்கலாம் எனவும், 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் நகை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, உடலை மீட்ட போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரியின் கணவர் சக்கரவர்த்தி பேசும்போது , வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய மகள் மாலை 6.30 மணிக்கு போன் செய்து அம்மா செத்துக்கிடப்பதாக தன்னிடம் தெரிவித்தார். மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கம்மல் திருடுபோயுள்ளதாக கூறினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.