சென்னை அருகே திருமணத்திற்கு பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேஜா என்பவருக்கும் பட்டாபிராம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெருவதாக இருந்தது. எனவே. மணமக்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக அவர்களின் நண்பர்கள் ஆங்காகே பேனர் வைத்துள்ளனர்.
அப்படி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். அப்போது, தினேஷ் தனது திருமணம் முடிந்தவுடன் பேனர்களை அகற்றி விடுகிறேன் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால், திருமண வீட்டாருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் மணமகன் தினேஷை காவல்துறையினர் வலுகட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனால் மணப்பெண்ணும் காவல்துறையினரிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். சம்பவ இடத்தில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் வசந்தி திருமண வீட்டாரை பார்த்து தகாத வார்த்தைகளில் வசைபாடினார்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே காவல்துறையினர் அராஜக போக்குடன் நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவேற்பு நிகழ்ச்சியில் மணக் கோலத்தில் மணமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
This website uses cookies.