Categories: தமிழகம்

‘கொன்னு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்’… மகனின் காதலியை மிரட்டிய தந்தை ; நாடகமாடி கர்ப்பத்தையும் கலைத்த கொடூரம்!!

திண்டுக்கல் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூரைச் சேர்ந்தவர் வீரையா. இவரது மகள் சூர்யா (22) பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதனை ஆய்வாளராக (செக்கிங் இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வருபவர் முருகன். இவரது மகன் அருண்குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க: 2வது நாளாக மளமளவென சரிந்தது தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் தெரியுமா..?!!

இந்நிலையில், அருண்குமாரும் சூர்யாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் சென்னையில் பணியாற்றி வருவதால், சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வந்தனர். இதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சூர்யா கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அருண்குமாரின் பெற்றோருக்கு தெரிய வர, சென்னைக்கு விரைந்து சென்ற, உறவினர்கள் சூர்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கருக்கலைப்பு செய்த பிறகு, சாலைப்புதூர் கிராமத்தில் திருமண வைத்துக்கொள்ளலாம்? என ஏமாற்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் சொந்த ஊரான பட்டிவீரன்பட்டி அருகே, சாலைப்புதூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், அருண்குமாருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சூர்யா தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து அருண்குமாரிடம் கேட்டபோது, திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த சூர்யா புதன்கிழமை இரவு காதலன் அருண்குமார் வீட்டு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றோர்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து ஏமாற்றி கர்பமாக்கிய காதலன் அருண்குமார் வீட்டு முன்பு காதலி சூர்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

22 minutes ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

58 minutes ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

1 hour ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

1 hour ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

2 hours ago

This website uses cookies.