சாலையோர சாக்கடைக்குள் கிடந்த சூட்கேசில் பெண் சடலம் : திகிலை ஏற்படுத்திய திருப்பூர் சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2022, 12:24 pm
![Suitcase Dead Body - Updatenews360](https://www.updatenews360.com/wp-content/uploads/2022/02/Suitcase-Dead-Body-Updatenews360-1024x571.jpg)
திருப்பூர் : கேட்பாரற்று கிட்நர் சூட்கேஸில் இளம் பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் – தாராபுரம் சாலை, பொல்லிக்காளிபாளையம் பிரிவு அருகேயுள்ள ஒத்தக்கடை என்ற பகுதியில், சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்டு அவ்வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2022/02/image-75.png)
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் பெண் சடலம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2022/02/image-76.png)
மேலும் உயிரிழந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா, ? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூட்கேஸில் பெண் சடலம் இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0