விழுப்புரம் நகர காவல் நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விழுப்புரம் நகர மையப் பகுதியில் அமைந்துள்ளது விழுப்புரம் நகர காவல் நிலையம்.. எப்பொழுதும் ஆள் நடமாட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும் இந்த விழுப்புரம் நகர காவல் நிலைய பின்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு தலைப்பகுதி மட்டும் கிடப்பதாக திடீரென தகவல் காட்டு தீ போல் பரவியது..
இதனைக் கண்ட அந்த காவல் நிலைய காவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் அந்த பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது நகர காவல் நிலைய வளாகத்தில் காவல் நிலையம் பின்புறம் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் தலைப்பகுதி மட்டும் ஒன்று கிடந்தது. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து டிஎஸ்பி பார்த்திபன் விசாரணையை தீவிரப்படுத்தினார். மேலும் தலை மட்டும் எப்படி கீழே கிடந்தது என்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், விழுப்புரம் நகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை அடையாளம் காணுவதற்காக அந்த உடலில் இருந்த தலை பாகம் மட்டும் போலீஸார் பகுப்பாய்வு கூடதற்கு ஆய்வு செய்ய அனுப்பி மீண்டும் அதனைப் பெற்று பதப்படுத்தி அங்குள்ள அதாவது காவல் நிலைய பின்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறையில் ரசாயனம் போடப்பட்ட ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அது எப்படி வெளியே வந்தது என்று தெரியாமல் காவல்துறையினர் மேலும் விசாரணை தீவிர்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஒரு அறிக்கையும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தற்போது நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் காவல் நிலையத்தில் பெண் தலைப்பகுதி மட்டும் துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.