தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும் படியாக சொகுசு காரில் வந்த பெண் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் சுமார் 22 கிலோ கஞ்சாவினை கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்… அமித்ஷாவுக்கு விஜய் பதிலடி!
இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இலக்கியா காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், உத்தம பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரினை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
This website uses cookies.