விருதுநகர் : திருச்சுழி அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது, அவர்களிடமிருந்த ஒன்றே கால் (1.250) கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மாங்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக எம்.ரெட்டியபட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் இராமநாதன் தலைமையிலான போலீசார் மாங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாங்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பெண்களை விசாரணை செய்த போது அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மீனாட்சி, தடாகை நாச்சியார், சமுத்திரவள்ளி ஆகிய மூன்று பெண்களை கைது செய்த போலீசார், அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில், விற்பனைக்கு வைகப்பட்டு இருந்த ஒன்றே கால் (1.250) கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த 3 பெண்கள் மீதும் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.