உஷாரய்யா உஷாரு.. ONLINE விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற வாலிபர் மாயம்: மீட்டுத் தர மனைவி கோரிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. முத்துக்குமார் அடிக்கடி ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்று வருவார். திருமணத்திற்கு பின்னர் மீண்டும் வெளிநாடு சென்று விட்டு கடந்த மாதம் தான் ஊருக்கு வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மீண்டும் தாய்லாந்து செல்ல உள்ளதாக மனைவி சுந்தரியிடம் கூறியுள்ளார். மனைவி சுந்தரி எந்த ஏஜெண்ட் மூலம் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த முறை நான் ஆன்லைன் மூலம் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு கேட்டிருந்தேன். அவர்கள் என்னை வேலைக்கு அழைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி மீண்டும் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார்.பேங்காங் விமான நிலையம் சென்றடைந்தவுடன் முத்துக்குமார் வாட்சாப் மூலம் அவரது மனைவி சுந்தரிக்கு பேசியுள்ளார்.

விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு மொபைல் சிம்கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். அங்கிருந்து கார் மூலம் ஹோட்டல் ரூமுக்கு சென்ற முத்துக்குமார், அதன்பின் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரது மனைவி சுந்தரியிடமும் பேசாமல் உள்ளார்.

முத்துக்குமாரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் கண்டுபிடிக்க முடியாததால், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்று தனது கணவரை மீட்டுத் தரும்படி புகார் அளித்துள்ளார்.

Sudha

Recent Posts

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; உறுதியேற்ற தவெக தலைவர் விஜய்…

தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…

18 minutes ago

பெரிய கட்சியில் என்னை போட்டியிட அழைக்கிறார்கள்… விஜய்க்கு எதிராக நிற்பேன் : பவர் ஸ்டார் மீண்டும் பேச்சு!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…

22 minutes ago

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

2 days ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

2 days ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

2 days ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 days ago

This website uses cookies.