Categories: தமிழகம்

இட்லி கடையும்… இடைவிடாத தன்னம்பிக்கையும்.. தள்ளாடும் வயதிலும் தளராத 80 வயது பாட்டி; மகளிர் தின ஸ்பெஷல்…!!

யாரையும் எதிர்பாராமல் சிறிய உணவகத்தை நடத்தி தன் சொந்த காலில் நிற்கும் 80 வயது பாட்டி குறித்த செய்தி தொகுப்பு…

நாம் பெண்களின் சாதனைகளையும், வெற்றிகளையும் மகளிர் தினமாக கொண்டாடும் வேளையில், 80 வயதிலும் சுயதொழில் செய்து உழைத்து வருகிறார் நெல்லை ஜெயா பாட்டி. ஜெயாப்பாட்டியின் கணவரும், மகன், மகள் இறந்து விட, திருமணம் செய்து கொடுத்து விட்டு யாரும் இல்லாமல் கடந்த 30 வருடங்களாக தனிமரமாய் வாழ்ந்து வருகிறார்.

எந்த நிலையிலும் அவர் துவண்டு விடவில்லை. வாழ்க்கையை ஒரு வாட்டி வாழ்ந்து பார்த்து விடலாம் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும் பம்பரமாய் சுழன்று நெல்லை சந்திப்பு அருகில உடையார்பட்டியில் ஜெயா பாட்டி இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதில் வரும் வருமானம் பெரிய அளவில் இல்லையென்றாலும், அவர் யாரிடமும் கையேந்தாமல் தன்னை தானே காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார்.

இவ்வாறு எந்த நிலையிலும் எத்தகைய கடினமாக சூழலின் போது பெண்கள் தங்களுடைய தன்னம்பிக்கையையும் கைவிட கூடாது என தெரிவிக்கிறார் ஜெயா பாட்டி. வேதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் பெண்களுக்கு மகளிர் தினத்தின் அதே வேளையில் 80 வயதிலும் உழைத்து கொண்டிருக்கும் ஜெயா பாட்டி தன்னம்பிக்கை ஒரு உதாரணம்.

இது குறித்து பாட்டி ஜெயா கூறுகையில்:- என்னுடைய கணவர் இறந்தவுடன் அவரிடம் படித்த தொழிலையே செய்து என்னுடைய மகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். வயதாகி விட்டது என்று மகளிடமும், உறவினர்களிடமும் உதவி கேட்க மனம் இல்லாமல் உடலில் தெம்பு இருக்கும் வரை உழைத்து சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இட்லி கடையை நடத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் இருக்கும். சில நாட்களில் 200 ரூபாய்க்கு வியாபாரம் இருக்கும் என்றாலும், அதை வைத்து நான் சமாளித்து வருகிறேன். அருகில் உள்ளவர்கள் எனக்கு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது போன்ற சிறு உதவிகள் செய்து வருகின்றனர்.

வீடு, கடை வாடகைக்கு தான் இருக்கிறேன். கடை வைத்திருப்பதால் முதியோர் அல்லது கணவனை இழந்தவர்களுக்கான உதவித்தொகை எனக்கு கிடைக்கவில்லை. உதவி தொகை கிடைத்து இருந்தால் உடல் நலம் சரியில்லாது போனால் உதவித்தொகையை வைத்து பயன் பெற்று இருப்பேன். ஆனால், அதற்கு எனக்கு அரசு உதவி செய்யவில்லை. அந்த உதவித்தொகையை பெற்று தருவதற்கு எனக்கு யாரும் இல்லை என்ற வருத்தம் தான் மிஞ்சுகிறது.

மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். பெண்களுக்காக நான் கூறுவது தாய், தந்தை பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு கைத்தொழில் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். அது பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், கஷ்ட காலத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த வயதிலும் யாரிடமும் யாசகம் கேட்காமல் உழைத்து சாப்பிடும் இந்த பாட்டியின் கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டு காசு கொடுத்தாலே அவருக்கு நாம் செய்த பெரிய உதவியாக இருக்கும்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 minutes ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

1 hour ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

2 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

2 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

3 hours ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

3 hours ago

This website uses cookies.