பொதுமக்களிடம் அநாகரீகம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அலட்சியம்: அதிரச் செய்த குற்றச்சாட்டு…!!

திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை மனுவாக அளிக்க வருவது வழக்கம் அந்த வகையில் இன்று திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, சுகன்யா,பாலாமணி,ஆகியோர் உறவினர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு அளிக்க வந்தனர் .

பொதுமக்கள் அளிக்கும் மனுவை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் இவர்களின் மனுவை சரி பார்க்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் நிற்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சக்கரவர்த்தி என்பவரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்க அதிகாரி சக்ரவர்த்தி பெண்களிடம் தரக்குறைவாக பேசியதோடு தனது இருக்கையை விட்டு எழுந்து மனு அளித்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மே மாதம் தனது கணவர் விபத்தில் இறந்ததாகவும் அவர் விபத்தில் இறந்தபோது ஓட்டி வந்த வாகனத்தை கடந்த கேட்டு இரண்டு மாதங்களாக காவல் நிலையத்தில் கேட்டு வருகிறோம் ஆனால் பெண்கள் என்பதால் மிகவும் அலட்சியப்படுத்துவதாகவும் அதேபோன்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அலட்சியப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் மனுவை பதிவிடும் அதிகாரிகள் அலட்சியமாகவும் , அநாகரீகமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

AddThis Website Tools
Sudha

Recent Posts

தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

54 minutes ago

போலீஸ் அனுப்பிய ‘அந்த’ வீடியோ.. சாலை மறியலில் மக்கள்.. 2 முறை காவலர் கைதானது ஏன்?

சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…

2 hours ago

கத்தி முனையில் இளம்பெண் கற்பழிப்பு… வீடியோ எடுத்து மிரட்டல் : நண்பனுக்கும் விருந்தளித்த கொடூரம்!

கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

2 hours ago

டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…

2 hours ago

கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…

3 hours ago