சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞருக்கு தர்ம அடி : பழனியில் பரபரப்பு..!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமி தியேட்டர் அருகில் போதையில் வந்த வட மாநில இளைஞர் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெண் ஒருவர் கூச்சலிட்டு ஓடியுள்ளார். இதை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி போதையில் இருந்த நபரை அடித்து உதைத்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வட மாநில இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் பீகாரைச் சேர்ந்த பாஸ்வான் என்பதும் பழனி அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாக முதல்கட்மாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வட மாநில இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.