Categories: தமிழகம்

கட்டிட பூச்சு வேலையின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி : வைரலாகும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

விழுப்புரம் : திண்டிவனம் கல்லூரி சாலையில் புதிதாக கட்டிய கட்டிட பூச்சு வேலையின் போது ஊரல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர் மின்னழுத்த மின்சார ஒயரில் சிக்கி எரிந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35). இவர் மாலை முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் புதிதாக கட்டிய கட்டிடத்தின் பூச்சு வேலையை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்சார ஒயரில் சுரேஷின் கைபட்டு மின்சாரம் தாக்கி எரிந்த நிலையில் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி எரிவதைக் கண்ட சக ஊழியர்கள் பயத்தில் அலறினார்கள்.

இவருடன் மேலும் மூவர் பணியில் இருந்தனர். மின்சாரம் தாக்கியதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்சாரம் தாக்கி எரிந்த போது மின்சார வயர் அறுந்து விழுந்தது.

மின் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் ஊழியர்கள் வந்து மின்சாரத்தை நிறுத்தினார்கள் . பூச்சு வேலைக்காக கட்டப்பட்ட சாரம் மின்சார ஒயரைதொடும் படியாக இருந்ததுதான் விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் இறந்த சுரேஷ் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி இறந்த சுரேஷுக்கு சரளா என்ற மனைவியும் மனிஷா 7 மகளும், லோகித் 5 என்ற மகனும் குழந்தைகள் உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

4 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

5 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

6 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

7 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

8 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

8 hours ago

This website uses cookies.