வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுபா என்பவர் கடந்த 15-நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு சென்றபோது அங்கு உள்ள “டி மார்ட்” சூப்பர் மார்க்கெட்டில் தனது குழந்தைக்கு சாக்கோ சாக்லேட் ஓட்ஸ் வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சாக்கோ சாக்லேட் ஓட்ஸை தனது குழந்தைக்கு சுடு பாலில் கலந்து கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: ’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!
அப்போது அதனை உண்ட சுபாவின் இரண்டரை வயது குழந்தை வாயில் ஏதோ நெளிகிறது என்று பயந்துபோய் கீழே துப்பியுள்ளது. கீழே துப்பிய சாக்கோ சாக்லேட்டில் பெரிய அளவிலான புழு கரு நிறத்தில் ஊர்ந்து சென்றதை கண்ட சுபா பயந்து போய் உள்ளார்.
சாக்கோ சாக்லேட் ஓட்ஸ் தயாரிப்பு தேதி 22.10.2024 காலாவதி தேதி 19.07.2025 என அச்சிடப்பட்ட நிலையில் காலாவதி ஆகாத சாக்கோவில் சாக்லேட் புழு இருந்தது அதிர்ச்சி அளிக்ககூடிய ஒன்றாக உள்ளதாகவும், வெதுவெதுப்பான பாலில் கூட புழு சாகாமல் இருந்துள்ளது எனக்கூறி சுபா ஆன்லைன் மூலமாக உணவு பாதுகாப்புத் துறைக்கும் நுகர்வோர் மன்றத்திற்கும் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற தின்பண்டங்களை வாங்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்று சுபா தெரிவித்துள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.