திருநின்றவூரில் தனியார் ஓட்டலில் வாங்கிய சாம்பார் சாதத்தில் புழு இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் தனது உறவினர்களுடன் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள பிரபல பெரம்பூர் ஸ்ரீனிவாசா உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள், ஸ்பெஷல் மீல்ஸ் மற்றும் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து காத்திருந்தனர். முன்னதாக, சாம்பார் சாதத்தை மூவரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, சாப்பாட்டில் புழு இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு மற்றும் உறவினர்கள் புழுவை அங்கிருந்த ஊழியர்களிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மேலாளரிடம் கேட்ட போது, தவறு நடந்ததை ஒப்பு கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.