திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களை வெளியிட முன் வரவேண்டும் என கோவையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில், அரசியல் கதை களம் கொண்டு உருவாகி வரும் ஒரு விரல் புரட்சி எனும் சினிமா படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர் விவாகி இயக்கத்தி்ல் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா,வையாபுரி, ஆர் சுந்தர்ராஜன்,மொட்டை ராஜேந்திரன்,நளினி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
கோவையில் பஞ்சாப் தமிழன் என அனைவராலும் அழைக்கபடும் டோனி சிங் தயாரிப்பில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான முதல் போஸ்டர் வெளியீட்டு விழா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. இதில்,படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ள கோவையை சேர்ந்த விவாகி, தயாரிப்பாளர் பஞ்சாப் தமிழன் டோனி சிங் மற்றும் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா, வையாபுரி, புரொடக்ஷன் மேனேஜர் சாகுல் ஆகியோர் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு பேசினர்.
அப்போது பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், தற்போது பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த நிலையை மாற்றி, சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களையும் வெளியிட முன் வரவேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஒ.டி.டி.தளங்கள் அனைத்து படங்களையும் வெளியிட முன் வரவேண்டும் எனவும், அப்போது மட்டுமே புதிய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஒரு விரல் புரட்சி படத்தின் தயாரிப்பாளரும்,இதில் முக்கிய ரோலில் நடித்து வரும் பஞ்சாப் தமிழன் டோனி சிங், தமது அரசியல் அனுபவங்களை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்ததாக கூறிய அவர், ஜனநாயக கடமையில் பொதுமக்களின் வாக்குகள் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அவர் கூறினார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில் இசபெல்லா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.