திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களை வெளியிட முன் வரவேண்டும் என கோவையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில், அரசியல் கதை களம் கொண்டு உருவாகி வரும் ஒரு விரல் புரட்சி எனும் சினிமா படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர் விவாகி இயக்கத்தி்ல் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா,வையாபுரி, ஆர் சுந்தர்ராஜன்,மொட்டை ராஜேந்திரன்,நளினி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
கோவையில் பஞ்சாப் தமிழன் என அனைவராலும் அழைக்கபடும் டோனி சிங் தயாரிப்பில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான முதல் போஸ்டர் வெளியீட்டு விழா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. இதில்,படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ள கோவையை சேர்ந்த விவாகி, தயாரிப்பாளர் பஞ்சாப் தமிழன் டோனி சிங் மற்றும் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா, வையாபுரி, புரொடக்ஷன் மேனேஜர் சாகுல் ஆகியோர் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு பேசினர்.
அப்போது பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், தற்போது பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த நிலையை மாற்றி, சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களையும் வெளியிட முன் வரவேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஒ.டி.டி.தளங்கள் அனைத்து படங்களையும் வெளியிட முன் வரவேண்டும் எனவும், அப்போது மட்டுமே புதிய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஒரு விரல் புரட்சி படத்தின் தயாரிப்பாளரும்,இதில் முக்கிய ரோலில் நடித்து வரும் பஞ்சாப் தமிழன் டோனி சிங், தமது அரசியல் அனுபவங்களை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்ததாக கூறிய அவர், ஜனநாயக கடமையில் பொதுமக்களின் வாக்குகள் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அவர் கூறினார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில் இசபெல்லா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.