மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் மதுரை மாநகர பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம், நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மின் கட்டண உயர்வால் தொழில் வளமிக்க தமிழகம் தொழிற்சாலைகளை இழந்து வேலை வாய்ப்புகளை இழந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வருவது அதிகமாகும்.
மின் கட்டணம் உயர்ந்தால் பொருட்கள் விலை உயரும், தமிழக மூதல்வர் இவ்விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மின் வாரிய கடனை அடைக்க வேறு வகையில் சிந்திக்க வேண்டும், இதை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
மின் வாரியத்தில் ஆபத்து கால நீதி என ஒன்று உள்ளது, அதை பயன்படுத்த வேண்டும், ஆள தெரிந்தவர்களுக்கு அது தெரியும், ஆளத்தெரியவில்லையென்றால் அதை கண்டுபிடிக்க முடியாது என கூறினார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.