மதிமுக திமுகவுடன் இணைக்க வேண்டும் என மதிமுக அவை தலைவர் திருப்பூர் திருவிழா வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துரைச்சாமியின் கருத்து தொடர்பாக மதிமுக மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் பூமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
இன்று காலை மதிமுக அவைத்தலைவர் திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று பேசிய கருத்து தலைவர் வைகோவின் கருத்து இல்லை.
அவைத்தலைவர் வேண்டும் என்றே தலைவர் வைகோவின் கருத்துக்கு ஏதிராக பேசுகிறார். கட்சியில் பலர் வருவார்கள் போவார்கள் ஆனால் தலைவர் வைகோவின் கருத்தே இறுதியானது , தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்பவர்கள் தான் கட்சி பொறுப்பில் நியமிக்கபடுகின்றனர்
யாரும் உறவினர் என்ற முறையில் பொறுப்பு வழங்கப்படவில்லை, அவைத்தலைவர் தெரிவித்த கருத்து சுயநல நோக்கத்திற்காக தெரிவித்துள்ளது அதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
அவைத்தலைவர் திமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இப்போது திமுகவுடன் இணைய வேண்டும் என்று சொல்வது ஏன் ?
மாவட்ட செயலாளர்கள் முடிவின் அடிப்படையில் தான் துரை வைகோவிற்க்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. வைகோவுக்கு இதில் விருப்பம் இல்லை மாவட்ட செயலாளர்கள் முடிவின் அடிப்படையிலயே பொறுப்பு வழங்கப்பட்டது.
வாரிசு அரசியல் எங்குதான் இல்லாம இருக்கு ..? இந்திய முழுவதும் பல கட்சிகளில் வாரிசு அரசியல் இருக்கதான் செய்கிறது வைகோவிற்கு பிறகு துரை வைகோ தான் அடுத்த தலைவர் அது தான் எங்கள் விருப்பம் என்றார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.