உங்களுக்கு ஓட்டு இல்லை… வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி : வாக்காளர்கள் வாக்குவாதம்!
மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 25.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் தீவிர வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலையில், சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பாகம் எண் 255, 256 ஆகிய இரண்டிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கச் சென்று உள்ளனர்.
அப்போது, ”உங்களுக்கு ஓட்டு இல்லை, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை” என அதிகாரிகள் கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் இந்த வாக்குசாவடியில் மட்டும் 80 ,க்கும் மேற்பட்டபேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் படிக்க: அதிக வாக்குப்பதிவு மகிழ்ச்சியே.. செல்லுமிடமெல்லாம் வரவேற்பு : நெகிழ்ச்சியில் சௌமியா அன்புமணி!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்தும் தங்களது பெயர் பட்டியலில் இல்லை என கூறி தொகுதி அளவிளான அதிகாரி சுசிலா விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்களிக்க முடியாமல் அங்கு இருந்த தொகுதி அதிகாரி சுசிலா விடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், எங்கள் பெயர்கள் எப்படி பட்டியலில் இல்லாமல் போகும்… பெயர்களை நீக்கியது யார் என்று கேட்டு வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.