Categories: தமிழகம்

ஒன்றிய அரசிடம் இருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுங்க.. நிருபர்கள் சந்திப்பில் ஆவேசமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஒன்றிய அரசிடம் இருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுங்க.. நிருபர்கள் சந்திப்பில் ஆவேசமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடப் பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார துறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் பெரிய மாவட்டங்களை விட தருமபுரி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்த பின் இதுவரையில் ஆறு பேர் தர்மபுரி மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்ட மக்களிடையே மனிதாபிமானமும், மனித நேயமும் அதிகமாக உள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தர்மபுரி மாவட்டம் ஒரு புதிய வரலாறை படைத்துள்ளது.

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் அதிக கன மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரண பணிகள் நடைபெற்று வரும் வேளையில் தென் மாவட்டங்களில் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த நான்கு மாவட்டங்களில் 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மழை நீர் புகுந்துள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த மழை நீரை மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றி, தற்போது அது வடிந்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தளம் வரையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக அரசு உடனடியாக அங்கு மருத்துவ கல்வி இயக்குனரை அனுப்பி வைத்து, ஐ சி யு வில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அங்கு தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை போன்று தென் மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளது.ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளைக்கும் தேவைக்கு ஏற்ப ஒரு இடம் அல்லது இரண்டு, மூன்று இடங்களில் முகாமிட்டு அங்குள்ள மக்களுக்கு மழைக்கால நோய்கள் வராதவாறு மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரும் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்றார்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூபாய் 6000 போதுமானத கூடுதல் நிதி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பிய போது வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றிய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுங்கள் என்றும், தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் 11 வருடங்களாக பொறுப்பு மருத்துவ அலுவலராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இதே போன்று 13 வருடங்களாக வட்டார மருத்துவ அலுவலராக ஒருவர் பணியாற்றி வருகிறார் என்று கேள்வி எழுப்பியபோது ஆவேசமாக பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

1 hour ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.