Categories: தமிழகம்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…தட்டிக்கேட்ட தாய்க்கு கொலைக்கு மிரட்டல்: போக்சோவில் கைதான அண்ணன்-தம்பி..!!

கடலூர்: சிதம்பரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 20 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் என்பவரது மகன் பார்த்திபன். இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

1 வருடமாக சிறுமியை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் பதறிப்போன அந்த சிறுமி இதுகுறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அந்த சிறுமியின் தாய் பார்த்திபனுடன் இதைப்பற்றி தட்டிக் கேட்டதற்கு அந்த இளைஞரின் அண்ணன் மோகன்ராஜ் என்கிற சரவணன் அந்தப் பெண்ணிடம் உன் மகளை என் தம்பிக்கு கட்டி கொடுத்துவிடு இல்லையெனில் உன்னையும், உன் மகளையும் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன அந்த சிறுமியின் தாய் இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் பார்த்திபன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரது அண்ணன் சரவணன் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

திடீரென ஒரு ஆடு.. திருமாவை காலி செய்யும் திமுக.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!

வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…

47 minutes ago

CSK Vs RCB:17 வருட பீடையை தகர்க்குமா ரஜத் படிதார் அண்ட் கோ..களைகட்டும் சேப்பாக்கம்.!

IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…

48 minutes ago

TVK Vs DMK தான்.. மாண்புமிகு ஸ்டாலின், மோடி ஜி அவர்களே.. விஜய் அட்டாக் பேச்சு!

இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…

2 hours ago

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

3 hours ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

3 hours ago

This website uses cookies.