புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் கார் பராமரிப்பு மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மையத்தின் உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கார் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கார் பராமரிப்பு மையத்தில் இன்று பணியில் இருந்த வாழைக்குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர் மற்றும் உரிமையாளர் தனசேகர் ஆகிய இருவரும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலாஜி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த பாலாஜியின் உறவினர்கள் தகவலறிந்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உயிரிழப்புக்கு காரணமான உரிமையாளர் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை கைது செய்யக்கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . மேலும் முற்றுகையில் ஈடுபட்ட பலாஜியின் உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைய செய்தனர்.
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
This website uses cookies.