பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பந்தா காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற 24 வயது வாலிபர் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்று, அந்த பாடல்களில் வருவது போன்று காட்சிகளுக்கு பட்டா கத்தியுடன் வீடியோ பதிவு செய்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த காட்சிகள் சமூகவலைதள பக்கத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர், அவருடைய செல்போன் மற்றும் பட்டாகத்தியை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.