நத்தத்தில் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம்… கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் எம்.கே.ராஜா (வயது 30) இவர் புதிய திராவிட கழக கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன் (ஆகஸ்ட்-17-ம் தேதி) பிறந்த நாள். அதனால் அவரது பிறந்தநாளை நண்பர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணி நண்பனுக்காக கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை ராஜா அவரது வீட்டின் அருகே பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.
ராஜா பட்டா கத்தியால் கேக் வெட்டியதை அவரது நண்பர்கள் ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர். இது காட்சி நத்தம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக கேக் வெட்டப்பட்டுள்ளதாகவும், ராஜாவின் இந்நடவடிக்கை பொதுமக்களை மிரட்டும் தொனியில் உள்ளதாகவும் போலீசார் ராஜாவை தேடி விரைந்தனர்.
இப்படி பட்டா கத்தியால் கேக் வெட்டினால் மற்ற இளைஞர்களிடம் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
This website uses cookies.