தமிழகம்

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழ நம்பிபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் – காளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது மகன், மகளுடன் பரமக்குடியில் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது, காளியம்மாளின் 17 வயது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்று இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பெண் வீட்டார் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், அப்பெண்ணின் தாய் காளியம்மாளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து சந்தோஷ் பிரச்னை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் காளியம்மாள், தனது 17 வயது மகளை கீழநம்பி புரத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பிற்பகல், இளம்பெண்ணை சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவரும் தன்னிடம் பேச வேண்டும் என்று தூத்துக்குடிக்கே வந்து வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரது உடலில் தீ வைத்துள்ளனர். தீக்காயங்களுடன் அலறிய அந்தப் பெண்ணை உடனடியாக மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

பின்னர், பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தாய் காளியம்மாள் கண்ணீர் மல்க கூறுகையில், “எனது மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது அரசு, காவல்துறை உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பெண்ணிற்கும் இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

7 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

8 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago

This website uses cookies.