மதுரையில், மது வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியைக் கொலை செய்து, காதை அறுத்து தங்கத்தோடை விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த திருவேடகம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை. மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சோனைக்கு மது வாங்கப் பணம் இல்லாமல் இருந்துள்ளது.
ஆனால், அவரால் மது அருந்தாமல் இருக்க இயலவில்லை. எனவே, மது வாங்க பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து வந்த சோனை, மூதாட்டி ஒருவரைப் பார்த்துள்ளார். திருவேடகம் கிராமத்திலேயே வசித்து வருபவர், 80 வயதான பாப்பாத்தி என்ற அந்த மூதாட்டி.
மேலும், மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்கத் தோடை கவனித்த சோனை, அதனை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்துள்ளார். எனவே, அவர் மூதாட்டியைக் கொலை செய்து, அவரது காதை அறுத்துள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த தோடுகளை எடுத்துச் சென்று விற்றுள்ளார்.
இதையும் படிங்க: கோவை சத்யன் திடீர் விலகல்… என்ன காரணம்? பரபரக்கும் அதிமுக!!
பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவந்தான் போலீசார், சோனையைல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.