தமிழகம்

விபத்தில் சிக்கி இளைஞர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம் : உடலுக்கு அரசு மரியாதை!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகன் கார்த்திக் ராஜா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டு இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் ராஜா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இதையும் படிங்க: பாலியல் புகார் எதிரொலி : விஜய்யின் ஆஸ்தான நண்பர் கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு!

இந்நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் உறுப்புகள், கண், இதயம் சிறுநீரகம் போன்ற ஆறு உறுப்புகள் இன்று தானம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை அரசு மரியாதை செய்தனர். பின்னர் அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பத்திரிகையோடு நடிகர் விஷால்… விரைவில் திருமணம் : நல்ல நேரம் ஸ்டார்ட்..!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…

34 minutes ago

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

16 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

16 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

16 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

17 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

18 hours ago

This website uses cookies.