நெல்லை : நெல்லையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மாரி ராஜ் (32) இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மாரிராஜ் திடீரென வீட்டில் வைத்து விஷமருந்தி மயங்கி கிடந்துள்ளார்.
இதை கவனித்த அவரது குடும்பத்தினர் மாரி ராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாரி ராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாரிராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், மாரிராஜ் ஒரு தலை காதலால் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மாரி ராஜ் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் மாரிராஜ் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.