திருவள்ளூர் :கிணற்றைக் காணவில்லை என்று திரைப்பட பாணியில் ஏழு குளங்களைக் காணவில்லை என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பதாகை ஏந்தி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் உள்ள ஏழு குளங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து பலமுறை வட்டாட்சியர் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கை பெயர் பலகை வைத்த பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
ஏழு குளங்களை காணவில்லை எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையோடு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை பொன்னேரி சாராட்சியர் அலுவலக ஊழியர்கள் சாராட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து விசாரித்த சாராட்சியர் ஐஸ்வர்யா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இச்சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.