விழுப்புரம் : செஞ்சி அருகே சாலையோர விளம்பர பலகையில் மோதிய இளைஞர் சாலையோரம் நடந்து வந்து இறந்துள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 22) இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு செஞ்சியில் இருந்து தன் சொந்த ஊரான பள்ளியம்படிற்க்கு பைக்கில் செல்லும் பொழுது செஞ்சி நான்கு முனை சந்திப்பை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் மோதி மாட்டி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கிருந்து நடந்தே வந்து சாலையில் அமர்ந்த நிலையில் இறந்துள்ளார்.
மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பின்னர் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது,பிரேத பரிசோதனையில் சந்துருவுக்கு தலையில் பலத்த அடிபட்டு இறந்தது உள்ளாக தெரியவருகிறது.
இளைஞர் சந்துரு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.